எகிப்தில் காஸாவை இணைக்கும் ரஃபா அல் ரஷி சர்வதேச சாலையில் ராணுவ வீரர்களை குறிவைத்து பயங்கர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
எகிப்தின் வடக்கு சினாயில் ரஃபா அல் ரஷி சர்வதேச சாலையில் முகமுடி அணிந்த சில நபர்கள் சாலையோரம் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தனர். சரியாக ராணுவ வாகனம் செல்லும் தருணத்தில் இந்த குண்டு வெடிக்கச் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் குறைந்தது 3 வீரர்கள் கொல்லப்பட்டனர். படுகாயமடைந்தவர்களின் நிலை மோசமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
எகிப்துக்கான காஸா எல்லைப் பகுதி சாலை சமீபத்தில் திறக்கப்பட்டது. இந்த நிலையில் நடத்தப்பட்டு இந்தத் தாக்குதலை அடுத்து, அந்தப் பகுதிகளில் உள்ள தீவிரவாத நிலைகள் மற்றும் வீடுகள் மீது எகிப்து ராணுவம் மீண்டும் குண்டு வீச தொடங்கியுள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
3 mins ago
விளையாட்டு
9 mins ago
சினிமா
15 mins ago
தமிழகம்
36 mins ago
இந்தியா
21 mins ago
சினிமா
45 mins ago
தமிழகம்
46 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
7 mins ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago