பின் லேடனை பிடிக்க அமெரிக்காவுக்கு உதவிய வழக்கறிஞர் சுட்டுக் கொலை

By ஐஏஎன்எஸ்

பின் லேடன் இருப்பிடம் குறித்து சி.ஐ.ஏ-வுக்கு தகவல் அளித்து உதவிய ஷாகில் அஃப்ரிதியின் வழக்கறிஞர் சமயுல்லா அஃப்ரிதி சுட்டுக் கொல்லப்பட்டார்.

பாகிஸ்தானின் பெஷாவார் நகரில் சென்று கொண்டிருந்த சமயுல்லா அஃப்ரிதியின் கார் மீது மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அவர் உயிரிழந்ததாக டான் செய்தி சேனலில் ஆன்லைன் பதிப்பு தெரிவித்துள்ளது. இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு தலிபான் இயக்கத்தின் இருவேறு கிளைகள் பொறுப்பேற்றுள்ளன.

கடந்த 2013-ல், தொடர்ந்து வந்த அச்சுறுத்தலால் பாகிஸ்தானிலிருந்து தப்பித்து சென்ற சமயுல்லா அஃப்ரிதி சமீபத்தில் நாடு திரும்பினார். இருப்பினும், பின் லேடனை பிடிக்க சி.ஐ.ஏ-வுக்கு துப்பு அளித்த மருத்துவர் ஷாகில் அஃப்ரிதியின் மீதான வழக்கில் தான் ஆஜராகப்போவதில்லை என்று தெரிவித்தார்.

கைபர் மாகாண லஷ்கர்-இ-இஸ்லாம் இயக்கத்துடன் தொடர்பில் இருந்ததாக மருத்துவர் ஷாகில் அஃப்ரிதி மீது வழக்கு உள்ளது. இந்த வழக்கில் ஷாகில் தரப்பு வழக்கறிஞராக சமயுல்லா ஆஜாராகி இருந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

10 hours ago

தமிழகம்

14 mins ago

தமிழகம்

20 mins ago

சுற்றுலா

42 mins ago

தமிழகம்

47 mins ago

தமிழகம்

55 mins ago

உலகம்

57 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

மேலும்