நைஜீரியாவில் ஒரு பஸ்ஸை சிறைபிடித்த தீவிரவாதிகள், அதில் இருந்த 7 பயணிகளை சுட்டுக் கொன்றனர். 8 சிறுமிகளை கடத்திச் சென்றுள்ளனர்.
நைஜீரியாவில் செயல்படும் போகோஹாரம் தீவிரவாதிகள் குண்டுவெடிப்பு, ஆள்கடத்தல் உள்ளிட்ட பல்வேறு நாசவேலை களில் ஈடுபட்டு வருகின்றனர். அங்குள்ள கோஸா நகர் அருகே நேற்று ஒரு பஸ்ஸை தீவிரவாதிகள் சிறைபிடித்தனர்.
அந்த பஸ்ஸில் இருந்த 7 பேரை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுக் கொன்றனர். பின்னர் அதில் இருந்த 11 வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட 8 சிறுமிகளை கடத்திச் சென்றுவிட்டனர்.
கடந்த ஆண்டு சுமார் 300 பள்ளி மாணவிகளை போகோஹாரம் தீவிரவாதிகள் கடத்திச் சென்றனர். மேலும் கடந்த ஓராண்டில் மட்டும் குண்டுவெடிப்பு உள்ளிட்ட நாசவேலைகள் மூலம் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை கொலை செய்துள்ளனர்.
இந்நிலையில் போகோஹாரம் அண்மையில் வெளியிட்ட வீடியோவில் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் தலைவர் அல்-பாக் தாதியின் உரை இடம்பெற்றுள் ளது. இதனால் மேற்கத்திய நாடுகளின் பார்வை தற்போது நைஜீரியாவின் பக்கமும் திரும்பியுள்ளது.
முக்கிய செய்திகள்
க்ரைம்
2 mins ago
இந்தியா
12 mins ago
விளையாட்டு
1 min ago
இந்தியா
17 mins ago
தமிழகம்
39 mins ago
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
3 hours ago
தொழில்நுட்பம்
8 hours ago
விளையாட்டு
9 hours ago
சினிமா
10 hours ago
தமிழகம்
11 hours ago
விளையாட்டு
13 hours ago