நைஜீரியாவில் பஸ் சிறைபிடிப்பு 7 பயணிகள் கொலை, 8 சிறுமிகள் கடத்தல்

By ஏபி

நைஜீரியாவில் ஒரு பஸ்ஸை சிறைபிடித்த தீவிரவாதிகள், அதில் இருந்த 7 பயணிகளை சுட்டுக் கொன்றனர். 8 சிறுமிகளை கடத்திச் சென்றுள்ளனர்.

நைஜீரியாவில் செயல்படும் போகோஹாரம் தீவிரவாதிகள் குண்டுவெடிப்பு, ஆள்கடத்தல் உள்ளிட்ட பல்வேறு நாசவேலை களில் ஈடுபட்டு வருகின்றனர். அங்குள்ள கோஸா நகர் அருகே நேற்று ஒரு பஸ்ஸை தீவிரவாதிகள் சிறைபிடித்தனர்.

அந்த பஸ்ஸில் இருந்த 7 பேரை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுக் கொன்றனர். பின்னர் அதில் இருந்த 11 வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட 8 சிறுமிகளை கடத்திச் சென்றுவிட்டனர்.

கடந்த ஆண்டு சுமார் 300 பள்ளி மாணவிகளை போகோஹாரம் தீவிரவாதிகள் கடத்திச் சென்றனர். மேலும் கடந்த ஓராண்டில் மட்டும் குண்டுவெடிப்பு உள்ளிட்ட நாசவேலைகள் மூலம் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை கொலை செய்துள்ளனர்.

இந்நிலையில் போகோஹாரம் அண்மையில் வெளியிட்ட வீடியோவில் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் தலைவர் அல்-பாக் தாதியின் உரை இடம்பெற்றுள் ளது. இதனால் மேற்கத்திய நாடுகளின் பார்வை தற்போது நைஜீரியாவின் பக்கமும் திரும்பியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

2 mins ago

இந்தியா

12 mins ago

விளையாட்டு

1 min ago

இந்தியா

17 mins ago

தமிழகம்

39 mins ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

தொழில்நுட்பம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

சினிமா

10 hours ago

தமிழகம்

11 hours ago

விளையாட்டு

13 hours ago

மேலும்