பாகிஸ்தானில் 7 தீவிரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

By பிடிஐ

பாகிஸ்தானில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஒரே நாளில் 7 தீவிரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

பாகிஸ்தானில் உள்ள கராச்சி, பைசலாபாத், ராவல்பிண்டி மற்றும் சுக்கூர் சிறைகளில் மொத்தம் 7 தீவிரவாதிகளுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக டான் இணையதள செய்தியில் தெரிவிக்கப்பட்டது.

பெஹ்ரம் கான், ஷாஹித் ஹனீஃப், முகமது தல்ஹா, கலீல் அகமது, சுல்ஃபித்கர் அலி, முஸ்தக் அகமது மற்றும் நாவாஷ் அலி ஆகியோர் மரண தண்டனை ப் பெற்ற தீவிரவாதிகள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் பெஷாவர் தாக்குதலுக்கு பின்னர் தீவிரவாததுக்கு எதிரான நடவடிகையாக மீண்டும் மரண தண்டனை வழங்கப்பட்டு வருகிறது.

மரண தண்டனை மீண்டும் கொண்டு வந்த பிறகு பாகிஸ்தானில் கடந்த மாதம் டிசம்பர் மாதம் முதல் மொத்தம் 17 தீவிரவாதிகளுக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

தமிழகம்

11 mins ago

இந்தியா

15 mins ago

இந்தியா

37 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

வலைஞர் பக்கம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்