கென்யா நாட்டில் உள்ள மன்டேரா நகரில் கல் குவாரி தொழிலாளர்கள் மீது தீவிரவாத குழுவினர் நேற்று நடத்திய தாக்குதலில் 36 பேர் உயிரிழந்தனர்.
தொழிலாளர்களை முஸ்லிம்கள், முஸ்லிம் அல்லாதவர்கள் என பிரித்து, பின்னர் முஸ்லிம் இல்லாதவர்களை மட்டும் சுட்டுக்கொன்றதாக அல் ஜசீரா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. உயிரிழந்த தொழிலாளர்கள் அனைவரும் மன்டேரா நகரைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இந்தத் தாக்குதல் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கென்யாவில் நவம்பர் 22-ம் தேதி, பஸ்ஸை வழிமறித்த தீவிரவாதிகள் 28 பயணிகளை சுட்டுக்கொன்றனர். இத்தாக்குதலுக்கு அப்-ஷபாப் இயக்கம் பொறுப்பேற்றது. இந்த சம்பவ இடத்திலிருந்து 30 கி.மீ. தொலைவில் தற்போது தொழிலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
32 mins ago
வாழ்வியல்
2 hours ago
க்ரைம்
1 hour ago
இந்தியா
1 hour ago
சினிமா
4 hours ago
வாழ்வியல்
1 min ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
சினிமா
5 hours ago
இந்தியா
2 hours ago