தலிபான் தலைவர் முல்லா உமர் கராச்சியில் உயிருடன் இருக்கிறார்- ஆப்கான் உளவுத்துறை

By பிடிஐ

ஆப்கான் தலிபான் தலைவர் முல்லா உமர் உயிருடன் இருப்பதாகவும், அவர் தற்போது கராச்சி நகரில் வசித்து வருவதாகவும் ஆப்கான் உளவுத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

இவருடைய தகவல் முன்னதாக மேற்கத்திய நாடுகளின் உளவுப்பிரிவுகள் அளித்த தகவலோடு ஒத்துப்போவதாகவும் கூறப்படுகிறது.

"முல்லா உமர் உயிருடன் இருக்கிறாரா? என்று சந்தேகங்கள் சில ஆண்டுகளாக இருந்து வருகிறது. ஆனால் அவர் கராச்சியில் தான் உள்ளார் என்று எங்களால் உறுதியுடன் கூற முடியும்" என்று ஆப்கான் உளவுத்துறை உயர் அதிகாரி ரகமத்துல்லா நபில் கூறியதாக 'நியூயார்க் டைம்ஸ்'அதன் செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே ஐரோப்பிய உளவுப்பிரிவு அதிகாரி நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தி உண்மை தான் என்றும், "ஆப்கானில் உள்ள தலிபான் அமைப்புகளின் மூன்று பிரிவுகளும் இதே தகவலை தெரிவித்துள்ளன. அவர் உயிருடன் இருப்பதோடு மட்டுமல்ல, கராச்சி நகரவாசிகளுக்கு முல்லா பதுங்கி இருக்கும் இடமும் நன்றாக தெரியும்" என்று கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

10 mins ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

55 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

1 hour ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

தமிழகம்

1 hour ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்