ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கு உதவ துருக்கி தயராக இருப்பதாக அந்நாட்டு அதிபர் எர்டோகன் தெரிவித்துள்ளார்.
மியன்மரில் சிறுபான்மையினராக உள்ள ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராக நடந்து வரும் வன்முறையில் கடந்த வாரத்தில் மட்டும் 110 பேர் கொல்லப்பட்டனர். 18,000க்கும் மேற்பட்டோர் தங்கள் சொந்த பகுதிகளிலிருந்து வெளியேறியுள்ளனர்.
இந்த நிலையில் துருக்கி அதிபர் எர்டோகன் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து உள்ளார்.
இது குறித்து அங்காரவில் நடந்த விழா ஒன்றில் எர்டோகன் பேசும்போது, "ரோஹிங்கியா முஸ்லிம்களை துருக்கி கைவிடாது. ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு உதவ துருக்கி தயாராக இருக்கிறது. உலக நாடுகள் அனைத்திடமும் இதனை எதிர்பார்க்கிறேன்” என்றார்.
வன்முறைகளுக்கு பின்னணி என்ன?
10 லட்சத்துக்கும் அதிகமான ரோஹிங்கிய முஸ்லிம்கள் மியான்மரில் ‘நிறவெறி’ காலக்கட்டத்தில் வாழ்வது போல் வாழ்ந்து வருகின்றனர்.
ஆனால் இவர்களை வங்கதேசத்திலிருந்து சட்டவிரோதமாக வந்தவர்கள் என்று மியான்மர் அரசு கூறிவருகிறது.
2012-ம் ஆண்டு ராக்கைனில் பவுத்தர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே வன்முறை வெடித்தது. இதனையடுத்தே சர்வதேச நாடுகளின் பார்வை மியான்மர் மீது விழுந்தது.
அதன் பிறகு அங்கு தொடர்ந்து பவுத்தர்களுக்கும், ரோஹிங்யா முஸ்லிம்களுக்கும் இடையே கலவரம் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
9 mins ago
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
5 hours ago
இந்தியா
6 hours ago
வணிகம்
7 hours ago
விளையாட்டு
7 hours ago
இணைப்பிதழ்கள்
7 hours ago
க்ரைம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
உலகம்
10 hours ago