அரேபிய நாடுகளின் நெருக்கடிகளுக்கு மத்தியில் ஈரான் உடனான ராஜாங்க உறவுகளை கத்தார் மீண்டும் தொடர முடிவு செய்துள்ளது.
இதன் மூலம் ஈரானின் நட்பு நாடுகளை குறைக்க முயலும் சவுதி போன்ற சக்தி வாய்ந்த அரேபிய நாடுகளின் முயற்சியில் பின்னடைவு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
அல் கொய்தா, இஸ்லாமிக் ஸ்டேட் மற்றும் முஸ்லிம் பிரதர்ஹூட் ஆகிய தீவிரவாத அமைப்புகளுக்கு கத்தார் உதவி செய்வதாக குற்றம் சாட்டி கத்தார் மீது பொருளாதார தடை விதிப்பதாக சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ), பஹ்ரைன், எகிப்து, ஏமன் ஆகிய நாடுகளுடன் லிபியா, மாலத்தீவுகள் எடுத்தன.
ஆனால் அரேபிய நாடுகளின் எதிரியாக கருதப்படும் ஈரான் கத்தாருக்கு நட்புக் கரம் நீட்டியது.
இந்த நிலையில் கத்தாரின் சமீபத்திய நடவடிக்கை குறித்து சியாட்டிலில் உள்ள ரைஸ் பல்கலைகழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் கிறிஸ்டன் கூறும்போது, "கத்தார் வேறு பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்பது அதன் பிராந்திய நாடுகள் அளிக்கும் அழுத்தத்ததை அந்நாடு உணராததன் மூலம் நன்கு தெரிகிறது" என்றார்.
மேலும் ஈரானுடனான அனைத்து உறவுகளையும் வலுப்படுத்த கத்தார் விரும்புகிறது" என்று அறிவித்துள்ளது ஈரான் உடனான உறவை கத்தார் மீண்டும் தொடர இருப்பதையே உறுதிப்படுத்தியுள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
59 mins ago
கல்வி
3 hours ago
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
தமிழகம்
8 hours ago
இந்தியா
8 hours ago
தமிழகம்
9 hours ago
சுற்றுச்சூழல்
10 hours ago
தமிழகம்
10 hours ago
சுற்றுலா
10 hours ago
வாழ்வியல்
10 hours ago
வாழ்வியல்
10 hours ago