ரஷ்யாவில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் விளாடிமிர் புதின் மீண்டும் போட்டியிட உள்ளார்.
ரஷ்ய அதிபர் தேர்தல் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற உள்ளது. தற்போதைய அதிபர் விளாடிமிர் புதின் ஏற்கெனவே 3 முறை அதிபராக பதவி வகித்துள்ளார். அவர் மீண்டும் தேர்தலில் போட்டியிடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட மக்களுடன் அதிபர் விளாடிமிர் புதின் நேற்று வீடியோ கான்பரன்ஸ் மூலம் உரையாடினார். அப்போது ஒருவர், மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று புதினை வற்புறுத்திக் கேட்டுக் கொண்டார்.
இதற்குப் பதிலளித்த புதின், உங்களின் விருப்பத்தை பரிசீலனை செய்கிறேன் என்றார். இதுகுறித்து அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறியபோது, அதிபர் தேர்தலில் புதின் போட்டியிடுவது உறுதி என்று தெரிவித்தன. அண்மையில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் 80 சதவீத மக்கள் புதினுக்கு ஆதரவாக வாக்களித்தது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
4 mins ago
தமிழகம்
27 mins ago
தமிழகம்
51 mins ago
தமிழகம்
53 mins ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
56 mins ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
2 hours ago
உலகம்
3 hours ago