தாய்லாந்தில் இருந்து தப்பிச் சென்ற முன்னாள் பிரதமர் யிங்லக் ஷினவத்ரா துபாய் சென்றுள்ளார். அவர் பிரிட்டன் அரசிடம் தஞ்சம் கோர முயற்சித்து வருகிறார் என்று தாய்லாந்து அரசு தெரிவித்துள்ளது.
யிங்லக் ஷினவத்ரா ஆட்சியில் இருந்தபோது அரிசி கொள்முதலில் ஊழல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கு அந்த நாட்டு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. வழக்கு விசாரணைக்காக யிங்லக் நேற்று முன்தினம் நேரில் ஆஜராக வேண்டும். ஆனால் அவர் ஆஜராகவில்லை. இதைத் தொடர்ந்து அவரைக் கைது செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனிடையே கம்போடியா, சிங்கப்பூர் வழியாக யிங்லக் ஷினவத்ரா துபாய்க்கு தப்பி சென்றுவிட்டதாகவும் அவர் பிரிட்டன் அரசிடம் தஞ்சம் கோர முயற்சித்து வருகிறார் என்றும் தாய்லாந்து அரசின் உளவுத் துறை தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
7 mins ago
இந்தியா
15 mins ago
இந்தியா
55 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
44 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
ஜோதிடம்
5 hours ago
ஜோதிடம்
5 hours ago
விளையாட்டு
9 hours ago
விளையாட்டு
10 hours ago
இந்தியா
11 hours ago