பாகிஸ்தானில் பதுங்கி உள்ள தீவிரவாதிகளைக் குறிவைத்து அமெரிக்க படையினர் நடத்திய ஆளில்லா விமான தாக்குதலில் தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 4 பேர் கொல்லப்பட்டனர்.
வடக்கு வசிரிஸ்தான் பகுதியில் உள்ள மிரான்ஷா நகரிலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள குதாப் கெல் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டின்மீது புதன்கிழமை இரவு தாக்குதல் நடத்தப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இத்தாக்குதலில் இறந்தவர்கள் உடனடியாக அடையாளம் காணப்படவில்லை. இவர்கள் ஆப்கனைச் சேர்ந்த தீவிரவாதிகளாக இருக்கும் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
மலைப்பாங்கான வடக்கு வசிரிஸ்தான் பகுதி தலிபான் மற்றும் அல் காய்தா தீவிரவாதிகளின் புகலிடமாக விளங்குகிறது. ஆப்கனில் முகாமிட்டுள்ள அமெரிக்க ராணுவம், அப்பகுதியில் பதுங்கி உள்ள தீவிரவாதிகளை குறிவைத்து ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குல் நடத்தி வருகிறது. இதுபோன்ற தாக்குதல் நடத்துவது இறையாண்மையை மீறும் செயல் என்று பாகிஸ்தான் அரசு குற்றம் சாட்டி உள்ளதுடன் இது எதிர்மறை விளைவை ஏற்படுத்தும் என்றும் கூறியுள்ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
4 mins ago
இந்தியா
26 mins ago
இந்தியா
1 hour ago
விளையாட்டு
1 hour ago
இணைப்பிதழ்கள்
1 hour ago
தமிழகம்
1 hour ago
இணைப்பிதழ்கள்
1 hour ago
இணைப்பிதழ்கள்
2 hours ago
தமிழகம்
2 hours ago
சினிமா
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago