நீஸ் தீவிரவாத தாக்குதல்: பிரான்ஸில் மேலும் 2 பேர் கைது

By செய்திப்பிரிவு

பிரான்ஸின் நீஸ் நகர தீவிரவாத தாக்குதல் தொடர்பாக மேலும் 2 பேர் இன்று கைது செய்யப்பட்டனர்.

கடந்த 14-ம் தேதி பிரான்ஸ் முழுவதும் தேசிய தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி நீஸ் நகரில் இரவில் வான வேடிக்கை நடத்தப்பட்டது. அப்போது ஐ.எஸ். தீவிரவாதி முகமது கனரக லாரியை கூட்டத்தில் மோதி 84 பேரை கொலை செய்தான். 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்த தாக்குதல் தொடர்பாக ஏற்கெனவே 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த வரிசையில் இன்று மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கும் தீவிரவாதி முகமதுவுக்கும் நெருங்கிய தொடர்பிருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

பிரான்ஸ் பாதுகாப்புப் பணியில் பொதுமக்களும் இணைய வேண்டும் என்று அந்த நாட்டு அரசு அழைப்பு விடுத்துள்ளது. இதை ஏற்று இதுவரை ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தன்னார்வ தொண்டர்களாக அந்தந்த நகரங்களின் பாதுகாப்புப் பணியில் இணைந்துள்ளனர்.

தலைநகர் பாரீஸின் பாதுகாப்பு ராணுவத்தின் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அங்கு போலீஸாரும் ராணுவ வீரர்களும் இணைந்து பாதுகாப்புப் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.







VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

9 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

ஜோதிடம்

12 hours ago

மேலும்