உலக மசாலா: சிலிர்ப்பூட்டும் சிகை சிற்பங்கள்!

By செய்திப்பிரிவு

வரி கோஸ்ட்டில் ஃபேஷன் டிசைனராக இருக்கிறார் லேட்டிடியா. சமீபத்தில் தன்னுடைய தலைமுடியை விதவிதமான வடிவங்களில் சிற்பம் போல உருவாக்கி, புகைப்படங்கள் எடுத்து காட்சிக்கு வைத்திருந்தார். தலை முடியை வைத்து மனித கைகள், பொம்மை, மரம், ஆப்பிரிக்கக் கண்டம் ஆகியவற்றை உருவாக்கி அசத்தியிருந்தார். இவற்றில் ஸ்மார்ட்போன் பிடித்திருந்த கை, புத்தகங்கள் பிடித்த கைகள், கிதார் வாசித்த கைகள் எல்லாம் மிக அழகான கற்பனை. “எனக்கு சிகை அலங்காரத்தில் ஆர்வம் அதிகம். எங்கள் ஆப்பிரிக்க பழங்குடி பெண்கள் இயல்பாகவே ரசனையாக அலங்காரம் செய்து கொள்வார்கள். அவற்றையெல்லாம் பார்த்து நானும் ஏதாவது செய்து கொண்டே இருப்பேன். ஒரு வருஷத்துக்கு முன்புதான் இதுபோன்ற விஷயங்களைச் செய்ய ஆரம்பித்தேன். அவற்றுக்குக் கிடைத்த வரவேற்பு அபாரமாக இருந்தது. என்னுடைய நீளமான சுருள் முடி என் கற்பனைக்கெல்லாம் ஈடு கொடுத்து வருகிறது. இந்த சிற்பங்களை உருவாக்குவதற்கு சில நிமிடங்கள்தான் எடுத்துக்கொள்வேன். ஆனால் என்ன செய்ய வேண்டும் என்று யோசிப்பதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்வேன். ஆப்பிரிக்கர்களின் தலைமுடியைப் பற்றி நல்லவிதமான எண்ணம் உலகில் இல்லை. அதை மாற்றும் விதத்தில் என்னுடைய படைப்பு இருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்” என்கிறார் லேட்டிடியா.

சிலிர்ப்பூட்டும் சிகை சிற்பங்கள்!

ன்ஜா ஹாலண்டர் அமெரிக்காவில் வசிக்கிறார். 5 ஆண்டுகளுக்கு முன்பு தன்னுடைய ஃபேஸ்புக் நண்பர்களை நேரில் சந்திக்க முடிவு செய்தார். ‘நீங்கள் என்னுடைய உண்மையான நண்பரா?’ என்ற பெயரில் ஒரு பிராஜக்டை ஆரம்பித்தார். மாதத்தில் 2 வாரங்கள் நண்பர்களை சந்திப்பதற்கு ஒதுக்கினார். ஒவ்வொருவரையும் நேரில் சந்தித்து, சில மணி நேரங்களை அவர்களுடன் செலவிட்டார். புகைப்படங்களும் வீடியோவும் எடுத்துக்கொண்டார். 5 ஆண்டுகள் முடிவில் 4 கண்டங்களிலுள்ள 12 நாடுகளுக்கும் அமெரிக்காவின் 43 மாகாணங்களுக்கும் சென்று நண்பர்களை சந்தித்து முடித்திருந்தார். “ஆன்லைன் நட்புக்கும் ஆஃப்லைன் நட்புக்கும் பெரிய வித்தியாசம் தெரியவில்லை. எல்லோருமே நீண்ட காலம் பழகியவர்களைப் போல அன்பு காட்டினர். மகிழ்ச்சி, சோகம், பொருளாதார சூழல், சமூகப் பார்வை என்று அத்தனை விஷயங்களையும் என்னுடன் பகிர்ந்துகொண்டனர். நேரில் பார்க்காத ஒருவரை எல்லோருமே மகிழ்ச்சியோடு தங்கள் வீட்டில் தங்க வைத்து, உபசரித்ததை என்னால் மறக்க முடியாது. விதவிதமான பழக்கவழக்கங்கள், உணவுகள் என்று இந்தப் பயணம் ரசனையாக அமைந்தது. 2010-ல் ஆரம்பித்த இந்தப் பயணம் 2016-ல் முடிவுற்றது. 400 வீடுகளுக்குச் சென்று 626 நண்பர்களை சந்தித்துவிட்டேன். ஒவ்வொருவரிடமும் பேசி விட்டுக் கிளம்பும்போது, அவர்கள் உண்மையான நண்பர்கள் என்று உணர்ந்துகொண்டேன். இந்த சந்திப்புகளை ஆவணப்படமாக உருவாக்கி, கடந்த மார்ச் மாதம் வெளியிட்டேன். இந்த பிராஜக்ட் எனக்கு ஏராளமான விஷயங்களை கற்றுக் கொடுத்திருக்கிறது” என்கிறார் டன்ஜா ஹாலண்டர்.

நட்புக்காக பெரும் பயணம்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

30 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

மேலும்