அணுஆயுத ஏவுகணை சோதனைகளை நிறுத்த வடகொரியாவிடம் சீனா வேண்டுகோள்: அமெரிக்கா தகவல்

By ஏபி

அணுஆயுத ஏவுகணை சோதனைகளை நிறுத்துமாறு வடகொரியாவிடம் சீனா கேட்டுக் கொண்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் கூரியுள்ளார்.

வடகொரியாவின் தொடர் அணுஆயுத ஏவுகணை சோதனை குறித்த ஃபாக்ஸ் தொலைக்காட்சியின் கேள்விக்கு பதிலளித்த டில்லர்சன், "அணுஆயுத சோதனை தொடர்பாக சீனா வடகொரியாவிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. மேலும் வடகொரியாவிடம் இனி அணுஆயுத ஏவுகணை சோதனைகளை நடத்தக் கூடாது என்று சீனா வேண்டுகோள் விடுத்துள்ளாதாக சீனா எங்களிடம் உறுதிப்படுத்தியுள்ளது. இதை மீறி அணுஆயுத ஏவுகணை சோதனைகளை வடகொரியா நடத்தினால் சீனா அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

வடகொரியாவின் தொடர் அணுஆயுத ஏவுகணை சோதனை தொடர்பாக அமெரிக்கா மற்றும் வடகொரியாவுக்கு இடையே மோதல் அதிகாரித்து வருகிறது.

இதனால் கொரிய தீபகற்பப் பகுதியில் போர் பதற்றம் நிலவுகிறது. இதனை தணிக்கும் பொருட்டு வடகொரியாவிடம் சீனா இது தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

10 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

ஜோதிடம்

12 hours ago

மேலும்