ஐஎஸ் இயக்கத்துக்கு எதிரான சண்டையில் அமெரிக்க படைகள் சிறப்பாக செயல்படுகின்றன என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியுள்ளார்.
இதுகுறித்து நாடாளுமன்ற பிரதிநிதிகள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் செவ்வாய்க்கிழமை ட்ரம்ப் பேசும்போது, "இராக்கில் அமெரிக்க படைகள் ஐஎஸ் இயக்கத்துக்கு எதிராக கடுமையாகச் சண்டையிட்டு வருகின்றன. இதற்கு முன்னர் எப்போதுமில்லாத அளவுக்கு நமது படைகள் இராக்கில் சண்டையிட்டு வருகின்றன. அதற்கான முடிவும் சிறப்பாகவே அமைந்துள்ளது.
மேலும் நமது ராணுவத்தை நமது நாட்டின் பாதுகாப்புக்காக புத்துணர்வு செய்வது மிக தேவையாக உள்ளது. இதன் மூலம் நாம் நேசிக்கும் நாட்டை முன்னேற்ற பாதையில் எடுத்துச் செல்ல வேண்டும்" என்றார்.
முன்னதாக அமெரிக்க படைகளின் உதவியுடன் இராக் அரசுப் படை ஐஎஸ் அமைப்புக்கு எதிராக தொடர்ந்து முன்னேறி வருகிறது. இதில் இருதரப்புக்கும் இடையே கடும் சண்டை நடைபெறுகிறது. இதனால் மோசூல் நகரில் இருந்து சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். கடந்த பிப்ரவரி 28-ம் தேதி மட்டும் 17,000 பேரும் மார்ச் 3-ம் தேதி 13,000 பேரும் மோசூலை விட்டு வெளியேறினர் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
20 mins ago
சுற்றுலா
40 mins ago
தமிழகம்
51 mins ago
தமிழகம்
58 mins ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
ஆன்மிகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
6 hours ago
இந்தியா
2 hours ago
கருத்துப் பேழை
2 hours ago
தமிழகம்
3 hours ago