தேசிய பாதுகாப்பு தொடர்பான ஆணவங்களை கத்தார் நாட்டுக்கு வழங்கியதாக தொடரப்பட்ட வழக்கில் எகிப்து முன்னாள் அதிபர் முகமது மோர்சிக்கு 40 ஆண்டு சிறை தண்டனை விதித்து, கெய்ரோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
மேலும், மோர்சியின் ஆட்சிக் காலத்தில் கத்தாருக்கு முக்கிய ஆவணங்கள் சென்று சேருவதற்கு உதவியாக இருந்த, அல்-ஜசிரா தொலைக்காட்சி நிறுவனப் பணியாளர்கள் இருவர் உட்பட, 6 பேருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அல்-ஜசிரா தொலைக்காட்சி சேனலின் செய்தி தயாரிப்பாளர் அலா ஓமர் முகமது மற்றும் செய்தி ஆசிரியர் இப்ராகிம் முகமது ஹிலால் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகாத நிலையில் அவர்க ளுக்கு எதிரான தீர்ப்பு வழங்கப் பட்டது.
கடந்த, 2013-ம் ஆண்டு ஆட்சியில் இருந்து அகற்றப்பட்ட மோர்சி, மற்றொரு வழக்கில் ஏற்கெனவே மரண தண்டனை விதிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 mins ago
தமிழகம்
44 mins ago
விளையாட்டு
1 hour ago
இந்தியா
1 hour ago
விளையாட்டு
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
உலகம்
3 hours ago
ஆன்மிகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
இந்தியா
4 hours ago