ஐஎஸ் இருப்பிட பகுதிகள் மீது பாக். ராணுவம் தாக்குதல்: 12 தீவிரவாதிகள் பலி

By பிடிஐ

ஐஎஸ் தீவிரவாதிகளின் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் தீவிர தாக்குதல் நடத்தியுள்ளது. இத்தாக்குதலில் 12 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தான் ராணுவத் தரப்பில், கடந்த ஜூன் 1 முதல் 3 தேதிகளில் மஸ்டங் நகரில் பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் ஐஎஸ் தீவிரவாதிகளின் இருப்பிடங்கள் அழிக்கப்பட்டன. இதில் 12 ஐஎஸ் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்" என்று கூறப்பட்டுள்ளது.

ஐஎஸ்ஸூக்கு எதிரான இந்தத் தேடுதல் வேட்டையில் வெடிகுண்டுகள் தயாரிப்பதற்காக ஐஎஸ் ஏற்படுத்திய குகைகள் பீரங்கிக் குண்டு தாக்குதலில் அழிக்கப்பட்டதாகவும், பல்வேறு ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் தீவிரவாதத்தை வளர்க்கிறது என்று இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் தெரிவித்திருந்த நிலையில் தீவிரவாதிகளுக்கெதிரான தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

24 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

மேலும்