பாகிஸ்தானுக்குள் நுழைந்து குண்டு வீசித் தாக்கும் அமெரிக்க விமானங்களை ராணுவம் சுட்டு வீழ்த்த வேண்டும் என்று லஸ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீத் கூறியுள்ளார்.
தாலிபான்கள் பதுங்கியிருக்கும் பகுதிகளில் அமெரிக்கா குண்டு வீச வேண்டும் என்று பாகிஸ்தான் கூறியுள்ள நிலையில் ஹபீஸ் சயீத் இவ்வாறு கூறியுள்ளார்.
பாகிஸ்தான் - ஆப்கன் எல்லைப் பகுதியில் பதுங்கியிருக்கும் தீவிரவாதிகளை அழிக்கும் நோக்கத்துடன் அமெரிக்க ஆளில்லா விமானங்கள் குண்டு வீசித் தாக்கி வருகின்றன. இதில் தீவிரவாதிகளோடு பொதுமக்கள் சிலரும் பலியாகி வருவது வாடிக்கையாகி வருகிறது.
பாகிஸ்தானின் இறையாண்மையை மற்ற உலக நாடுகள் மதிக்க வேண்டும் என்று சீனா கூறியுள்ள நிலையில் ஹபீஸ் சயீத் கூறும்போது, “பாகிஸ்தானுக்குள் நுழைந்து குண்டு வீசும் அமெரிக்க விமானங்களை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்த வேண்டும். ராணுவத் தளபதி, விமானப்படை தளபதிகளிடம் இதனை வேண்டுகோளாக வைக்கிறேன்” என்றார்.
டுரோன் தாக்குதலில் தாலிபான் தலைவர் முல்லா அக்தர் மன்சூர் குண்டு வீசிக் கொல்லப்பட்டதை அடுத்து ஹபீஸ் சயீத் பல்வேறு போராட்டங்களை பாகிஸ்தான் மற்றும் அமெரிக்காவுக்கு எதிராக நடத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இந்தியா
6 mins ago
இந்தியா
13 mins ago
கல்வி
19 mins ago
மாவட்டங்கள்
49 mins ago
உலகம்
54 mins ago
தமிழகம்
59 mins ago
தொழில்நுட்பம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
2 hours ago
விளையாட்டு
2 hours ago