மொன்டெனக்ரோ நாட்டின் வெற்றிகரமான தொழிலதிபர் ரடோமிர் நவகோவிக் ககன். இவரை ‘பால்கன் நாடுகளின் மிகச் சிறந்த முதலாளி’ என்றும் ‘அண்ணன்’ என்று ஊழியர்கள் கொண்டாடுகிறார்கள். ‘ககன் ஸ்போர்ட்ஸ்’ என்பது மிகப் பெரிய விளையாட்டுப் பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனம். இதன் உரிமையாளரான ரடோமிர் அடிக்கடி தலைப்புச் செய்திகளில் இடம்பிடிக்கிறார். சமீபத்தில் அரசியலிலும் நுழைந்திருக்கிறார். உண்மையாக உழைக்கக்கூடிய தன்னுடைய ஊழியர்களை மகிழ்ச்சியுடன் வைத்திருந்தால்தான், தனது நிறுவனம் மேலும் செழித்து வளரும் என்று உறுதியாக நம்புகிறார். அதற்காகவே நம்ப முடியாத பரிசுகளை வழங்கி வருகிறார். 2012-ம் ஆண்டு தனது நிறுவனத்தில் வேலை செய்யும் மூத்த ஊழியர்களுக்கு கார்களை பரிசாக அளித்தார். விலையுயர்ந்த கார்களை பார்த்த ஊழியர்கள் இவ்வளவு பெரிய பரிசு எதற்கு என்று தயக்கத்துடன் கேட்டனர். “இனிமேல் தாமதமாக வருவதற்குக் காரணம் சொல்ல முடியாது” என்று சிரித்தார். 2014-ம் ஆண்டு ஊழியர்களை பிரேசிலில் நடைபெற்ற கால்பந்து போட்டியைப் பார்ப்பதற்கு அழைத்துச் சென்றார். சென்ற ஆண்டு 14 ஊழியர்களை பஹாமாஸ், செஷல்ஸ் போன்ற இடங்களுக்குச் சுற்றுலா அனுப்பி வைத்தார். சமீபத்தில் ஏராளமான ஊழியர்களை ஆடம்பர கப்பலில் தங்க வைத்தார். “ஊழியர்களை ஊக்கப்படுத்த கொஞ்சம் பணம் கொடுத்தால் போதுமே என்று கேட்கிறார்கள். அதில் எனக்கு உடன்பாடு இல்லை. பணம் வரும், போகும். ஆனால் நினைவுகள் என்றும் நிலைத்திருக்கும். என் நண்பர் டிராவல் ஏஜென்ஸி நடத்துகிறார். அவர் சலுகைக் கட்டணத்தில் சுற்றுலா அறிவிப்புச் செய்யும்போது அதை எங்கள் ஊழியர்களுக்குப் பயன்படுத்திக்கொள்வேன். சுற்றுலா சென்று வந்த பிறகு ஊழியர்கள் இன்னும் ஆர்வத்துடனும் அக்கறையுடனும் வேலை செய்கிறார்கள். எல்லோரும் ஓரிடத்தில் சேர்ந்து வேலை செய்கிறோம். மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்கிறோம்” என்கிறார் ரடோமிர். கடந்த ஆண்டு அரசியலில் இறங்கி கவுன்சிலராக பொறுப்பேற்றுக்கொண்டு மக்களுக்குப் பல நன்மைகளைச் செய்து வருகிறார். பல்வேறு தொண்டு நிறுவனங்களுக்குத் தன் தொழில் மூலம் கிடைக்கும் பணத்தை நன்கொடைகளாக அளித்து வருகிறார்.
ஊழியர்கள் கொண்டாடும் முதலாளி!
தென் கொரியாவின் தலைநகர் சியோலில் இயங்கிவரும் எவர்யங் தொழில்நுட்ப நிறுவனம் 55 வயதுக்கு மேலுள்ளவர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கி வருகிறது. 4 ஆண்டுகளில் 55 83 வயதுக்கு உட்பட்ட முதியவர்கள் 420 பேருக்கு வேலை கொடுத்திருக்கிறது. “தென் கொரியாவில் 60 வயதானவர்கள் ஓய்வு பெற்றுவிடுவார்கள். இன்றைக்கு பொருளாதாரம் பெரும் பிரச்சினையாக இருக்கிறது. ஆயுட்காலம் அதிகரித்திருக்கிறது. வேலை செய்யக் கூடியவர்கள் தங்களால் முடிந்த வரை வேலை செய்வதற்கான வாய்ப்புகளை உருவாக்கியிருக்கிறோம். முதியவர் களின் அனுபவ அறிவு எங்கள் நிறுவனத்துக்கும் பயன்படும். முதியவர்கள் ஆர்வத்துடன் தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொள் கிறார்கள். சிறப்பாக வேலை செய்கிறார்கள். உணவு, மருத்துவம், பொழுதுபோக்கு போன்ற அம்சங்களையும் அவர்களுக்காக வைத்திருக்கிறோம்” என்கிறார் நிறுவனர் சங் என்சங்.
முதியவர்களுக்கு வேலை கொடுக்கும் நிறுவனம்!
முக்கிய செய்திகள்
தமிழகம்
6 hours ago
சுற்றுச்சூழல்
6 hours ago
தமிழகம்
7 hours ago
க்ரைம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
கல்வி
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
கல்வி
8 hours ago
தமிழகம்
9 hours ago