அமெரிக்காவில் கட்டடம் மீது குட்டி விமானம் மோதி பயங்கர விபத்து: 4 பேர் பலி

By ஏஎஃப்பி

அமெரிக்காவின் கான்சாஸ் விமான நிலையத்தில் குட்டி விமானம் ஒன்று புறப்படும்போது தடுமாறிய நிலையில் கட்டடத்துக்குள் பாய்ந்து பயங்கர விபத்து நேரிட்டது. இதில் 4 பேர் பலியானதாக கூறப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் கன்சாஸ் பகுதியில் உள்ள விச்சிடா விமான நிலையத்தில் வியாழக்கிழமை காலை குட்டி விமானம் விமான தளத்திலிருந்து புறப்பட்டபோது தடுமாறிய நிலையில், ஓடுதளத்திலிருந்து அருகே உள்ள கட்டடத்துக்குள் எதிர்ப்பாராத நிலையில் புகுந்தது.

விமானி மற்றும் கட்டடத்தில் இருந்து மூன்று பேரும் பலியாகியதாகவும், 5 பேர் காயம் அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.விபத்தால் பல கி.மீ தொலைவுக்கு புகை மூண்டது. இந்த விபத்தால் அங்கு பதற்றம் உண்டானது.

விமானத்தில் பயணிகள் இல்லாததால் உயிர் சேதம் மிகப் பெரிய அளவில் இல்லாமல் இருந்துள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

24 mins ago

ஜோதிடம்

40 mins ago

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

6 hours ago

வணிகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

க்ரைம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்