உலக மசாலா: இதெல்லாம் ரொம்பவே அநியாயம்...

By செய்திப்பிரிவு

மனிதர்களின் மிகச் சிறந்த தோழனான நாய்களுக்கு பிரிட்டனைச் சேர்ந்த ஹேகேட் வெரோனா நிறுவனம் ஆடம்பர மாளிகைகளைக் கட்டிக் கொடுத்து வருகிறது. 26 லட்சம் முதல் 1 கோடியே 28 லட்சம் வரைக்கும் மாளிகைகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. பளிங்குத் தரைகள், மர வேலைப்பாடுகள் நிறைந்த வீட்டு அலங்காரம், மாளிகைக்குள்ளும் வெளியிலும் வண்ண அலங்கார விளக்குகள், தானியங்கி உணவு மற்றும் தண்ணீர் இயந்திரங்கள், டிவி, எந்த நேரமும் கேட்கும் மெல்லிய இசை என்று வசதிகளும் ஆடம்பரங்களும் மாளிகையில் கொட்டிக் கிடக்கின்றன. “பெரும்பாலானவர்கள் தங்கள் செல்ல நாய்களைக் குடும்பத்தில் ஒருவராகவே கருதுகின்றனர். நாய்களுக்கும் அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கின்றனர். அவர்களுக்காகவே இந்த மாளிகைகளை உருவாக்கியிருக்கிறோம். இந்த மாளிகைகளில் உரிமையாளர்களும் வசிப்பதற்கு ஏற்ப குளிர் சாதன வசதி, இணைய வசதி போன்றவற்றைச் செய்திருக்கிறோம். இது நாய் வீடுகளை விடப் பெரியதாகவும் மனிதர்களின் வீடுகளைவிடச் சிறியதாகவும் இருக்கும்” என்கிறார் நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவரான ஆலிஸ் வில்லியம்ஸ்.

இதெல்லாம் ரொம்பவே அநியாயம்…

ஹைதி நாட்டின் தலைநகர் போர்ட் ஓ பிரின்ஸில் மருந்துகளையும் கூடைகளில் வைத்து வீடு தேடி வந்து விற்பனை செய்கிறார்கள்! ஹைதியில் மருந்துக் கடைகளைப் பார்ப் பது அரிதானது. அதனால் பெரும்பாலான மக்கள் வீடு தேடி வரும் மருந்துகளையே எளிதாக வாங்கிக்கொள்கிறார்கள். பிளாஸ்டிக் வாளிகளில் எல்லோரையும் எளிதில் கவர்ந்துவிடும்படி அழகாக மாத்திரைகளை அடுக்கி வைத்திருக்கிறார்கள் மருந்து வியாபாரிகள். பச்சை மாத்திரைக்கு அடுத்து மஞ்சள், சிவப்பு மாத்திரைக்கு அடுத்து வெள்ளை என்று விதவிதமான மாத்திரைகளை அழகாக அடுக்கி, கட்டி வைத்து விடுவதால், மருந்துக் கோபுரங்கள் கீழே விழுவதில்லை. இப்படி மருந்துகளை விற்பனை செய்வது சட்டப்படி குற்றம். ஆனால் எப்பொழுதாவதுதான் அரசாங்கத்திலிருந்து நட வடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மருந்துகளைப் பற்றிய முறையான புரிதலோ, பயிற்சியோ இல்லாத இந்த வியாபாரிகளிடம் கருக்கலைப்பு மாத்திரையிலிருந்து வயாகரா மாத்திரை வரை கிடைக்கின்றன. இவற்றில் பெரும்பாலான ஜெனரிக் மருந்துகள் சீனா விலிருந்தும் காலாவதியான மருந்துகள் டொமினிகன் குடியரசி லிருந்தும் வாங்கப்படுகின்றன. “மக்கள் எங்களிடம் எந்த ரகசியத் தையும் மறைப்பதில்லை. தொற்று, அஜீரணம், பாலியல் பிரச்சினை கள் என்று எந்தப் பிரச்சினைக்கும் எங்களிடம் மாத்திரைகள் இருக்கின்றன. அவரவர் பிரச்சினைகளைச் சொல்லி, தேவையான மருந்துகளை வாங்கிக்கொள்கிறார்கள்” என்கிறார் ரெனால்ட் ஜெர்மைன் என்ற மருந்து வியாபாரி. மருத்துவர் பரிந்துரை இல்லாமல், இப்படி வியாபாரிகளிடம் மருந்துகளை வாங்குவது தவறு என்று தன்னார்வ அமைப்புகள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றன. ஆனாலும் வியாபாரிகளிடம் மருந்துகளை வாங்குவது எளிதாகவும் செலவு குறைவாகவும் இருப்பதால் மக்கள் இவற்றையே நாடுகிறார்கள்.

உயிரோடு விளையாடும் மருந்து விற்பனை…

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

41 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

கல்வி

1 hour ago

தமிழகம்

1 hour ago

வேலை வாய்ப்பு

2 hours ago

தமிழகம்

2 hours ago

கல்வி

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

தமிழகம்

2 hours ago

கல்வி

2 hours ago

மேலும்