ஜப்பான்: கட்சித் தலைவர் தேர்தலில் ஷின்சா அபே வெற்றி

By செய்திப்பிரிவு

ஜப்பான் பிரதமர் ஷின்சா அபே ஆளும் கட்சி தலைவர் பதவிக்கான தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றிருக்கிறார்.

முற்போக்கு ஜனநாயக கட்சி யின் (எல்டிபி) தலைவரான ஷின்சோ அபே, கடந்த 2012-ம் ஆண்டு முதல் பிரதமராக பொறுப்பு வகிக்கிறார். இந்நிலையில், எல்டிபி கட்சித் தலைவர் தேர்தலில் அபே போட்டியிட்டார்.

இதில் வியாழக்கிழமை நடத்த தேர்தலில் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஷிங்கெரு இஷிபாவை தோற்கடித்து 3-வது முறையாக தலைவர் பதவிக்கு  ஷின்சே அபே தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு அவர் கட்சித் தலைவர் பதவியில் நீடிப்பார். இதன்மூலம் நீண்டகாலம் கட்சித் தலைவராக பதவி வகித்தவர் என்ற பெருமை அபேவுக்கு கிடைத்திருக்கிறது.

அபேவுக்கு காத்திருக்கும் சவால்கள்

ஜப்பானை பொறுத்தவரை ராணுவத்தை தற்காப்பு நடவடிக்கைகளுக்காக மட்டுமே பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளித்து வருகிறது.  பிற நாடுகளின் சண்டையின் போதோ, நட்பு நாடுகளுக்கு ஆதரவாக ராணுவத்தை பயன்படுத்த அனுமதி கிடையாது.  இதில் திருத்தம் கொண்டுவர அரசியல் சாசன சட்டத்தை திருத்த  அபே திட்டமிட்டிருக்கிறார்.

மேலும் அடுத்தவாரம் அமெரிக்க அதிபர் ட்ரம்புடனான சந்திப்பில், ஏற்றுமதி பொருட்கள் வரி தொடர்பாக சவாலை அவர் எதிர்கொள்ள வேண்டும்.

அடுத்து ஜப்பான்னின்  மக்கள்தொகையில் ஐந்தில் ஒரு பங்கினர் 70 வயதுக்கும் மேற்பட்ட முதியவர்கள் என்று அந்நாட்டுப் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் முதியவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும் அதிகரித்திருப்பதால் கொள்கை அளவிலான முடிவுகளை எடுக்க ஜப்பான் அரசு திட்டமிட்டிருக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

2 mins ago

வாழ்வியல்

42 mins ago

தமிழகம்

44 mins ago

இந்தியா

10 mins ago

க்ரைம்

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

ஓடிடி களம்

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

2 hours ago

மேலும்