ஈரானுடனான மோதல் எதிரொலி: அமெரிக்காவிலிருந்து இந்தியா வரும் விமானங்கள் ரத்து

By செய்திப்பிரிவு

ஈரானுடன் ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக அமெரிக்காவிலிருந்து ஈரான் வான்வழித் தளம் வழியாக இந்தியா வரும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த அறிவிப்பை அமெரிக்க ஏர்லைன்ஸ் வெளியிட்டுள்ளது.

அதில், ''ஈரானுடன் நிலவும் பதற்ற சூழல் காரணமாக பாதுகாப்பைக் கவனத்தில் கொண்டு ஈரானின் வான்வழி வழியாக இந்தியா வந்தடையும் விமானங்கள் இன்று மாலைவரை ரத்து செய்யப்படும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, எங்கள் வான்பகுதியில் பறந்த அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தைச் சுட்டு வீழ்த்தியதாகவும் ஈரான் கூறியிருந்தது.

இதற்கு ஈரான் மிகப் பெரிய தவறிழைத்துவிட்டதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து தற்போது ஈரான் வான்வழித் தடம் வழியாக இந்தியா வரும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது ஈரான் - அமெரிக்கா இடையே பதற்றத்தை அதிகப்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

32 mins ago

தமிழகம்

45 mins ago

இந்தியா

1 hour ago

ஜோதிடம்

38 mins ago

இந்தியா

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

வணிகம்

4 hours ago

மேலும்