ஆப்கன் படைகள் 5-வது நாளாக தலிபான்களுடன் கடும் சண்டை

By செய்திப்பிரிவு

ஆப்கானிஸ்தானின் மேற்குப் பகுதியில் அந்நாட்டுப் படைகள் தொடர்ந்து 5-வது நாளாக தலிபான்களுக்கு எதிராக கடுமையாகச் சண்டையிட்டு வருகின்றனர்.

இதுகுறித்து ஆப்கன் பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறும்போது, ''ஆப்கனில் தலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ள  மேற்குப் பகுதியில் கடந்த 48 மணி நேரத்தில் தலிபான்களுடன் நடந்த மோதலில் 12 பாதுகாப்புப் படை வீரர்கள் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து  5-வது நாளாக தலிபான்களுக்கு எதிராக சண்டை  நடந்து வருகிறது'' என்றார்.

ஆப்கானிஸ்தானில் அரசுப் படைகளுக்கும் தலிபான்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. அரசுப் படைகளுக்கு ஆதரவாக அமெரிக்கக் கூட்டுப் படையும் அங்கு முகாமிட்டுள்ளது.

கடந்த ஆண்டு தொடக்கத்தில் தலிபான் அமைப்பைச் சேர்ந்த தற்கொலைப் படைத் தீவிரவாதி தலைநகர் காபூலில் வெடிகுண்டுகள் நிரப்பிய ஆம்புலன்ஸை வெடிக்கச் செய்ததில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

அண்மைக்காலமாக பாதுகாப்புப் படையினருக்கு எதிராக தலிபான்களின் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.

கடந்த மூன்று வருடங்களில் தலிபான்களின் ஆதிக்கம் ஆப்கானிஸ்தானில் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

6 mins ago

விளையாட்டு

12 mins ago

சினிமா

18 mins ago

தமிழகம்

39 mins ago

இந்தியா

24 mins ago

சினிமா

48 mins ago

தமிழகம்

49 mins ago

தமிழகம்

1 min ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

10 mins ago

தமிழகம்

1 hour ago

மேலும்