ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் 10 குழந்தைகள் பலியாகி உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபை தரப்பில், ''ஆப்கானிஸ்தானின் வடக்குப் பகுதியில் உள்ள குண்டுஸ் தலிபான்களின் ஆதிக்கம் நிறைந்த பகுதியாக உள்ளது. இந்தப் பகுதியில் அமெரிக்கப் படைகள் கடந்த 30 மணி நேரத்தில் நடத்திய வான்வழித் தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டனர். இதில் 10 பேர் குழந்தைகள்'' என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்தத் தாக்குதல் குறித்து நேட்டோ படையின் செய்தித் தொடர்பாளர் ரிச்சர்ட்சன் கூறும்போது, ''குடிமக்களைக் காப்பற்ற வேண்டும் என்பதுதான் எங்களது நோக்கம். ஆனால் தலிபான்கள் பொதுமக்களை வேண்டும் என்றே மறைத்து வைத்தனர்'' என்றார்.
கடந்த வருடங்களாக ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல்கள் அதிகரித்து வருவதாகவும், இதன் காரணமாக இங்கு குழந்தைகள் இறப்பு அதிகரித்து வருவதாகவும் ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
49 mins ago
தமிழகம்
55 mins ago
இந்தியா
1 hour ago
சினிமா
2 hours ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
வாழ்வியல்
2 hours ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
3 hours ago
தமிழகம்
3 hours ago
ஓடிடி களம்
3 hours ago