ஷியா முஸ்லிம் என்பதால் சவுதியில் 6 வயது சிறுவன் தனது தாயின் முன் கொல்லப்பட்ட துயர சம்பவம் நடந்தது.
இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், ''சகாரியா அல் ஜாபர் என்ற 6 வயது சிறுவன் தனது தாயுடன் மெதினாவில் உள்ள புனிதத் தளத்திற்குச் செல்வதற்காக தனது தாயுடன் யாத்திரைக்கு வந்தார். அப்போது டிரைவர் ஒருவர் அவர்களிடம் நீங்கள் ஷியா முஸ்லிமா என்று கேட்டுள்ளார்.
அதற்கு சகாரியாவின் தாய் ஆம் என்று கூற, டாக்ஸியின் ஜன்னல் கண்ணாடியை உடைத்த டிரைவர், ''நீ இஸ்லாமின் தவறான வேரிலிருந்து வந்தவன்'' என்று கூறி சகாரியாவின் தொண்டையில் குத்திக் கொலை செய்தார். இதனைக் கண்ட சகாரியாவின் தாய் மயங்கி விழுந்தார்'' என்று செய்தி வெளியானது
இதனைத் தொடர்ந்து சகாரியாவின் கொலைக்கு நியாயம் வேண்டி, அந்நாட்டு முற்போக்காளர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
சமூக வலைதளங்களிலும் #JusticeforZakaria என்று பதிவிட்டு அவரது மரணத்துக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
6 mins ago
விளையாட்டு
1 hour ago
இந்தியா
1 hour ago
விளையாட்டு
2 hours ago
இந்தியா
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
4 hours ago
வாழ்வியல்
4 hours ago
ஜோதிடம்
5 hours ago