பாரிஸில் நடந்த தீ விபத்தில் 7 பேர் பலியாகினர். பலர் தீ காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து தீயணைப்புத் துறை அதிகாரிகள் தரப்பில், "பாரிஸில் கட்டடம் ஒன்றில் திங்கட்கிழமை 1 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் இதுவரை 7 பேர் பலியாகி உள்ளனர். பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. விவரிக்க முடியாத நிலையில் சேதம் ஏற்பட்டுள்ளது. 200க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீர்ரகள் தொடர்ந்து தீயை அணைக்க போராடி வருகிறார்கள். அந்தக் கட்டிடத்தில் இருந்த பிற மக்கள் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்” என்றனர்.
தீ விபத்து ஏற்பட்ட பகுதி சுற்றுலா தளமான ஈபிள் டவர் இருக்கும் பகுதி. அங்கு சுற்றுலா பயணிகள் நிறைந்து இருந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
4 mins ago
இந்தியா
14 mins ago
விளையாட்டு
3 mins ago
இந்தியா
19 mins ago
தமிழகம்
41 mins ago
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
3 hours ago
தொழில்நுட்பம்
8 hours ago
விளையாட்டு
9 hours ago
சினிமா
10 hours ago
தமிழகம்
11 hours ago
விளையாட்டு
13 hours ago