24 ஐஃபோன்களைக் கடத்திய பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவன ஊழியர்கள்

By செய்திப்பிரிவு

லண்டனிலிருந்து 24 ஐஃபோன்களை லாகூருக்குக் கடத்தி வந்ததாக பாகிஸ்தான் சர்வதேச ஏர்லைன்ஸ் நிறுவன ஊழியர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

பி.கே.758 என்ற இந்த விமான ஊழியர்கள் உயர் தொழில்நுட்ப ஐஃபோன்களைக் கடத்தி வருவதாக லாகூர் விமான நிலைய கஸ்டம்ஸ் அதிகாரிகளுக்கு துப்பு கிடைத்தது.

இதனையடுத்து கேப்டன் ஹஷ்மி மற்றும் 11 விமான ஊழியர்கள் காவலில் வைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டதில் 24 ஐஃபோன்கள் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டன. இதன் மதிப்பு சுமார் ரூ.2.5 மில்லியன்கள் ஆகும்.

விமானப் பணிப்பெண் ஒருவரின் பையில் இந்த போன்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்தச் சட்டவிரோத செயலை இவர்கள் திட்டமிட்டு செய்துள்ளதாக கஸ்டம்ஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் கேப்டன் ஹஷ்மியிடமிருந்து 5000 பவுண்டுகள் தொகையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் மாதமும் இதே போல் 37 ஸ்மார்ட் போன்களும் 5000 பவுண்டு கரன்சியும் பிடிக்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

4 hours ago

உலகம்

4 hours ago

மேலும்