ஆப்கன் உள்நாட்டுப் போர்: 2018-ல் பொதுமக்கள் 3,804 பேர் பலி

By செய்திப்பிரிவு

ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல் மற்றும் குண்டு வெடிப்புகளில் 3,804 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட அறிக்கையில், “ ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா கூட்டுப் படைகள் மற்றும் குண்டு வெடிப்பு தாக்குதல்களில் கடந்த அண்டு மட்டும் 3,804 பொதுமக்கள் பலியாகியுள்ளனர். அவர்களில் 927 பேர் குழந்தைகள்” என்று கூறப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானின் ஐ. நா.வின் உயரதிகாரி தடாமிச்சி  கூறும்போது,”பொதுமக்களின் இறப்பை தடுக்க உடனடியாக ஆப்கானிஸ்தானில் சண்டையை நிறுத்த வேண்டும். இதுவே சிறந்த வழி.   நாம் அனைவரின் முயற்சியில் அமைதி ஏற்படுத்திட வேண்டும்” என்றார்.

ஆப்கானிஸ்தானைத் தலிபான் தீவிரவாதிகள் பிடித்து வைத்துக்கொண்டு பயங்கர கட்டுப்பாடுகள் விதித்தனர். அமெரிக்க தலைமையிலான நேட்டோ படைகளின் அதிரடி நடவடிக்கைகளால் கடந்த 2001-ம் ஆண்டு தலிபான்கள் பிடியில் இருந்து ஆப்கன் விடுவிக்கப்பட்டது.

இருப்பினும் தொடர்ந்து தலிபான்களுக்கும், அரசுக்கும் சண்டை நடந்து வருகிறது.ஆப்கானிஸ்தான் பிரச்சினைக்கு அமைதியான தீர்வு காண்பதில், தேசிய அளவிலும் பிராந்திய அளவிலும் உலகளாவிய அளவிலும் முயற்சிகள் நடந்து வருகின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 mins ago

தமிழகம்

16 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

21 mins ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்