இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆகப் பதிவாகியுள்ளது.
இதுகுறித்து அமெரிக்க புவியியல் மையம், ''இந்தோனேசியாவில் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள மோலுக்கா தீவில் உள்ள டெர்னேண்ட் நகரில் ஞாயிற்றுக்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆகப் பதிவாகியது.இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து 5.0, 5.1 என்ற அளவில் நிலநடுக்கங்கள் ஏற்பட்டன'' என்று தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை என்றும் இதுவரை உயிரிழப்பு ஏதும் இல்லை என்றும் இந்தோனேசிய தேசியப் பேரிடர் மீட்புப் பணி அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த ஆண்டு டிசம்பர் 23-ம் தேதி இந்தோனேசியாவில் உள்ள சுமத்ரா,ஜாவீ தீவுப்பகுதியில் எரிமலை வெடிப்பு காரணமாக சுந்தா ஜலசந்தியில் ஏற்பட்ட சுனாமி அலையில் சிக்கி பலியானோர் எண்ணிகை 200-ஐத் தாண்டியது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
8 mins ago
தமிழகம்
31 mins ago
சினிமா
51 mins ago
தமிழகம்
46 mins ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
27 mins ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
2 hours ago