அமெரிக்காவில் ஷட்டவுன் ஒரு வருடம் நீடித்தாலும் எனது முடிவில் மாற்றமில்லை: ட்ரம்ப் பிடிவாதம்

By செய்திப்பிரிவு

அமெரிக்காவில் ஷட்டவுன் (அரசு பணி முடக்கம்) ஒருவருடம் தொடர்ந்தாலும் மெக்சிகோ எல்லைச் சுவர் எழுப்பும் எனது முடிவில் மாற்றம் இல்லை என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இதனை வெள்ளிகிழமை ஜன நாயகக் கட்சியினருடன் நடத்திய சந்திப்புக்குப் பிறகு ட்ரம்ப் தெரிவித்தார்.

இதுகுறித்து ட்ரம்ப் கூறும்போது, ”ஷட்டவுன்  ஒரு வருடம் தொடர்ந்தாலும் மெக்சிகோ எல்லைச் சுவர் குறித்த தனது முடிவில் மாற்றம் இல்லை. நான் தயாராகவே இருக்கிறேன். 

நாம் எல்லையில் சிறந்த பாதுகாப்பை பெற்றிருக்க வேண்டும். சுவருக்கான  நிதியை ஒதுக்கும்வரை நாம் எந்த மசோதாவிலும் கையெழுத்து போட போவதில்லை” என்று தெரிவித்தார்.

முன்னதாக அமெரிக்க- மெக்சிகோ எல்லையில் அகதிகள் நுழைவதைத் தடுக்கும் வகையிலும், அமெரிக்க உள்நாட்டுப்பாதுகாப்புக்கு வழி செய்யும் வகையிலும் சுவர் எழுப்ப அதிபர் ட்ரம்ப் திட்டமிட்டார். இதற்காக 500 கோடி டாலர் நிதி ஒதுக்கக் கோரினார்.

ஆனால், அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளையிலும் அதிபர் ட்ரம்பின் கோரிக்கைக்கு ஜனநாயகக் கட்சியின் எம்.பி.க்கள் செவிசாய்க்கவில்லை. அதற்கு ஒத்துழைக்க மறுத்துவிட்டனர். இதனால், இந்த நிதியாண்டுக்குச் செலவினத்துக்கான நிதி மசோதாவுக்கு ஒப்புதல் அளித்த இரு அவைகளிலும் இருந்த ஜனநாயகக்கட்சியினர் மறுத்துவிட்டனர்.

இதனால் அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் பண்டியையொட்டி ஷட்டவுன் தொடங்கியதால், 8 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஊதியமின்றி பணியாற்ற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

1 hour ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

சினிமா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்