பயங்கர கார் விபத்தில் சிக்கிய இங்கிலாந்து இளவரசர் பிலிப் காயங்களுடன் தப்பித்ததுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதுகுறித்து இங்கிலாந்து ஊடகங்கள் தரப்பில், ''சாண்ட்ரிகம் எஸ்டேட் பகுதியில் இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் கணவரான இளவரசர் பிலிப்பின் (வயது 97) கார் வியாழக்கிழமை விபத்துக்குள்ளானது. பிலிப் சென்ற கார் சாலை வளைவின் போது மீது கட்டுப்பாட்டை இழந்து மற்றொரு கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.இதனைத் தொடர்ந்து காயம் அடைந்த இளவரசர் பிலிப் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்'' என்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தச் செய்தியை பங்கிங்காம் அரண்மனையும் உறுதிப்படுத்தியுள்ளது.
''விபத்தில் பாதிப்படைந்த இரு கார் ஓட்டுநர்களும் மது அருந்தி காரை ஓட்டினார்களா என்பதைக் கண்டறிய சோதனை நடத்தப்பட்டது. அதில் அவர்கள் மது அருந்தவில்லை என்று உறுதி செய்யப்பட்டது. தற்போது இளவர்சர் பிலிப் நலமாக இருக்கிறார்'' என்று போலீஸார் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
19 mins ago
விளையாட்டு
10 mins ago
தமிழகம்
34 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
கருத்துப் பேழை
4 hours ago
இந்தியா
2 hours ago
கருத்துப் பேழை
4 hours ago
இந்தியா
2 hours ago
ஆன்மிகம்
2 hours ago