சோமாலியாவில் அமெரிக்கா வான்வழித் தாக்குதல்: 62 தீவிரவாதிகள் பலி

By செய்திப்பிரிவு

கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் 62 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இதுகுறித்து அமெரிக்க ராணுவம் தரப்பில், ”சோமாலியாவின் தென் பகுதியில் உள்ள பனாதிர் மாகாணத்தில்  சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை  அமெரிக்கப் படைகள் வான்வழித் தாக்குதல் நடத்தினர்.

இதில் 62 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதல் பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டே நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில் பொதுமக்கள் யாரும் கொல்லப்படவில்லை. தொடர்ந்து அப்பகுதியில் தீவிரவாதிகளுக்கு எதிராக தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது”  என்று தெரிவித்துள்ளது.

சோமாலியாவில் இந்த தீவிரவாதிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட மிகப் பெரிய தாக்குதலாக இது கருதப்படுகிறது.

சோமாலிய அரசுக்கு எதிராக அல் கொய்தாவுடன் இணைக்கப்பட்டுள்ள அல் ஷபாப் தீவிரவாத இயக்கத்தினர் அந்நாட்டில் அரசுக்கு எதிராக தொடர்ந்து நாச வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.பெரும்பாலும் ஹோட்டல்கள் மற்றும் சோதனைச் சாவடிகளைக் குறிவைத்து தீவிரவாதிகள் சமீபகாலமாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

6 hours ago

வணிகம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

தொழில்நுட்பம்

9 hours ago

சினிமா

10 hours ago

க்ரைம்

10 hours ago

விளையாட்டு

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்