இலங்கையில் நேற்று இரவு இரு போலீஸார் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில், விடுதலைப்புலிகளின் முன்னாள் துணைத் தலைவர் கருணாவுக்குத் தொடர்பு இருப்பதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.
இலங்கையின் கிழக்குப்பகுதியில் உள்ள மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வவுனித்தீவில் 4 போலீஸார் சோதனைச் சாவடியில் இருந்தனர். அப்போது அங்கு நடந்த துப்பாக்கிச்சூட்டில் 2 போலீஸார் கொல்லப்பட்டனர்.
இது குறித்து போலீஸ் துறை அமைச்சர் ரஞ்சித் மதுமா பந்தரா கூறுகையில் “ வவுனித்தீவில் நேற்று இரவு பாதுகாப்பில் இருந்த 4 போலீஸாரில் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் வடக்குமாநிலத்தைச் சேர்ந்த தமிழர், மற்றொருவர் தென்பகுதியைச்சேர்ந்த சிங்களர். துப்பாக்கிச்சூடு நடந்தது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்தார்.
தமிழ் தேசியக் கூட்டணியின் செய்தித்தொடர்பாளர் எம்.ஏ.சுமந்திரன் கூறுகையில், “ வவுனித்தீவில் 2 போலீஸார் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் எங்களுக்கு விடுதலைப்புலிகளின் முன்னாள் துணைத் தலைவர் கருணா மீது சந்தேகம் வருகிறது. இவர் கடந்த 2010 முதல் 2015-ம் ஆண்டுவரை ராஜபக்ச ஆட்சியில் துணை அமைச்சராக இருந்தார்.
இலங்கையில் கடந்த அக்டோபர் மாதம் அரசியல் குழப்பம் ஏற்பட்டபோதுதான் துணிச்சலாக கருணா அம்மான் வெளிவந்து பல்வேறு கருத்துக்களைக் கூறினார். எங்களுக்குக் கிடைத்த தகவலின்படி, கடந்த அக்டோபர் 26-ம் தேதிக்குப்பின், கருணா மற்றும் ராஜகபக்ச மீது கூடுதல் சந்தேகம் வருகிறது.
ராஜகபக்ச பிரதமராக நியமிக்கப்பட்டபின், அவரின் அமைச்சரவையில் நியமிக்கப்பட்ட டக்லஸ் தேவானாந்தா தமிழர்கள் வாழும்பகுதியில் பல்வேறு குழப்பங்களை விளைவிக்க முயன்றார், மிரட்டல்களிலும் ஈடுபட்டுள்ளார்.
குறிப்பாகக் கருணா அக்டோபர் 26-ம் தேதிக்குப்பின், சமூக ஊடகங்களில் தீவிரமாகச் செயல்பட்டு, தமிழ் எம்.பி.க்களை ராஜபக்சே பக்கம் இழுக்க முயன்றார். ஆனால், அது முடியவில்லை. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் தோற்றனர்” எனக் குற்றம்சாட்டினார்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
7 mins ago
தமிழகம்
11 mins ago
தமிழகம்
31 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
க்ரைம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
சினிமா
1 hour ago
இந்தியா
51 mins ago
இணைப்பிதழ்கள்
8 hours ago
இணைப்பிதழ்கள்
8 hours ago
இந்தியா
1 hour ago