கலிபோர்னியாவில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி பலியானோர் எண்னிக்கை 84 ஆக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க ஊடகங்கள் தரப்பில், ”கலிபோர்னியா மாகாணத்தின் வடக்குப் பகுதியில் கடந்த வாரம் தாக்கிய காட்டுத் தீயில் பெரும்பாலான பகுதிகள் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. சுமார் 1 லட்சம் ஏக்கர் நிலம் தீக்கு இரையாகி உள்ளது.
12 ஆயிரத்துக்கும் மேற்பட்டவீடுகள் நெருப்புக்கு நாசமாகி உள்ளன. 83 பேர் பலியாகினர். 500க்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளனர். அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது” என்றார்.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீண்டும் இயல்பு நிலை திரும்பும் என்று கலிபோர்னியா மீட்புப் பணி அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
கலிபோர்னியாவில் கடந்த வருடம் அக்டோபர், டிசம்பர் மாதங்களில் கடுமையான காட்டுத் தீ ஏற்பட்டது. இந்தக் காட்டுத் தீயில் ஆயிரக்கணக்கான வீடுகள், சுமார் 26,000 ஏக்கர் பரப்பளவு நிலங்கள் நாசமாயின என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இந்தியா
13 mins ago
இந்தியா
40 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
2 hours ago
தமிழகம்
3 hours ago
உலகம்
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago