துபாய் டூட்டி ப்ரீ லாட்டரியில் இந்தியருக்கு ரூ. 7.34 கோடி(10லட்சம் டாலர்) ஜாக்பாட் பரிசு கிடைத்துள்ளது.
இது குறித்து கலீஜ் டைம்ஸ் நாளேட்டில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:
துபாய் டூட்டி ப்ரீ லாட்டரிக்கு இன்று குலுக்கல் நடந்தது. இதில் இந்தியாவைச் சேர்ந்த 45வயதான சவுரவ் தேவ் என்பவருக்கு முதல் பரிசாக ரூ.7.34 கோடி(10லட்சம் டாலர்) பரிசு கிடைத்துள்ளது.
இந்தியரான சவுரவ் தேவ் கடந்த6 ஆண்டுகளாகக் காப்பீடு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த செப்டம்பர் மாதம் துபாயில் இருந்து கொல்கத்தாவுக்கு செல்லும் போது, சவுரவ் தேவ் லாட்டரி டிக்கெட் வாங்கினார். அந்த டிக்கெட்டுக்கு இப்போது பரிசு கிடைத்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சவுரவ் தேவ் கூறுகையில், துபாய் டூட்டி ப்ரீ லாட்டரி டிக்கெட் வாங்கிய எனக்கு முதல்பரிசு கிடைத்துள்ளதை நம்பமுடியவில்லை. இந்தப் பரிசு எனக்கு புதிய எதிர்காலத்தையும், என் குடும்பத்துக்கு மிகப்பெரிய எதிர்காலத்தையும் நீண்டகாலத்துக்கு அளிக்கும் எனத் தெரிவித்தார்.
சவுரவ் தவிர, பாபு அஜித் பாபு என்பவருக்கு 2-வது ப ரிசாக பிஎம்டிபிள்யு சொகுசு காரும், 3-வது பரிசாக இலங்கையைச் சேர்ந்த சஜீவா நிரஞ்சனாவுக்கு ரேஞ்ச் ரோவர் சொகுசு காரும் பரிசாகக் கிடைத்துள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
4 hours ago
விளையாட்டு
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
விளையாட்டு
11 hours ago
இந்தியா
12 hours ago
விளையாட்டு
13 hours ago
இந்தியா
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago