துருக்கியில் புலம்பெயர வந்தவர்களின் படகு விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலியாகினர். 30 பேர் மாயமானதாக அந்நாடு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து துருக்கி உள்துறை அமைச்சகம் தரப்பில், "துருக்கியின் இஸ்மிர் மாகாணத்தின் மேற்கு கடற்கரைப் பகுதியில் துருக்கிக்கு புலம்பெயர வந்தவர்களின் படகு அலைச் சீற்றத்தால் விபத்துக்குள்ளானது. அதில் 4 பேர் பலியாகினர். 30 பேர் மாயமாகினர். படகில் எத்தனை பேர் வந்தார்கள் என்ற உறுதியான தகவல் தெரியவில்லை. காணாமல் போனவர்களைத் தேடும் பணி தீவிரவமாக நடந்து வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
துருக்கியைப் பொறுத்தவரை மத்திய கிழக்கு நாடுகளில் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் பெருமளவு இடம்பெயரும் முக்கிய நாடாக இருக்கிறது.
ஏமன், சிரியா போன்ற நாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் துருக்கிக்கு கடல் வழியாக இடம்பெயர்ந்துள்ளனர். அவற்றில் பலரது படகுகள் விபத்துக்குள்ளான சம்பவங்கள் இதற்கு முன்னரும் நடந்துள்ளன.
இதனைத் தடுப்பதற்கு போதிய விழிப்புணர்வு நடவடிக்கைகளை துருக்கி அரசு எடுத்து வந்தாலும், இம்மாதிரியான விபத்துகள் அவ்வப்போது ஏற்பட்டு வருகிறது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
22 mins ago
இந்தியா
56 mins ago
விளையாட்டு
2 hours ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
4 hours ago
வாழ்வியல்
4 hours ago
ஜோதிடம்
4 hours ago
க்ரைம்
4 hours ago