பாரீஸில் தன் தாயையும் சகோதரியையும் இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்தது பரபரப்பாகியுள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில், கூறியதாவது, "பாரீஸ் நகரில் இன்று (வியாழக்கிழமை) இளைஞர் ஒருவர் தனது தாயாரையும், சகோதரியும் கத்தியால் குத்தி கொலை செய்திருக்கிறார். இந்தத் தாக்குதலில் மற்றொருவரும் காயமடைந்து மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்தத் தாக்குதலுக்கு உண்மையான காரணம் இதுவரை தெரியவில்லை. சம்பந்தப்பட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கத்தியால் தாக்குதல் நடத்திய நபருக்கும் தீவிரவாத அமைப்புக்கு தொடர்பு உள்ளது " என்று கூறியுள்ளனர்
இந்த நிலையில் பாரீஸ் தாக்குதலுக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.
இதுதொடர்பான செய்தியை தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் ஐஎஸ் அமைப்பு வெளியிட்டுள்ளது.
பிரான்ஸின் நீஸ் நகரில் தேசிய தின கொண்டாட்டத்தின்போது கனரக லாரியை அதிவேகமாக ஓட்டி வந்த ஐ.எஸ் தீவிரவாதி ஒருவர் மக்கள் திரள் மீது லாரியை விட்டதில் 10 குழந்தைகள் உட்பட 84 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
30 mins ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
2 hours ago
இலக்கியம்
7 hours ago
தமிழகம்
2 hours ago
இணைப்பிதழ்கள்
7 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago