ஈரான் நாட்டில் அரசுக்கு எதிரான போராட்டம், ஆர்ப்பாட்டம், கண்டனப் பேரணிகளை மக்கள் நடத்தி வருகின்றனர். அந்த நாட்டின் 10 நகரங்களில் அரசைக் கண்டித்து இந்த போராட்டம் நடைபெற்று வருவதாகத் தெரியவந்துள்ளது.
ஈரான் தலைநகர் டெஹ்ரா னுக்கு அருகிலுள்ள கராஜ் நகரில் வியாழக்கிழமை இந்தப் போராட்டம் தொடங்கியது. தற் போது 10 நகரங்களில் இந்தப் போராட்டம் பரவியுள்ளதாகத் தெரியவந்துள்ளது. டெஹ்ரான் தவிர அஹ்வாஸ், ஹமேதான், இஷாபான், கராஜ், கெர்மான்ஷா, மஷாத், ஷிராஸ், உர்மியா, வராமின் ஆகிய நகரங்களில் நேற்று மக்கள் சாலைகளில் இறங்கி போராட்டம், கண்டனப் பேரணிகளை நடத்தி வருகின்றனர்.
ஈரானில் பொருளாதார நிலைமை மோசமாகவுள்ளது. இதனால் அரசுக்கு எதிராக அவர் கள் கொந்தளித்துப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
அரசைக் கண்டித்து சாலையில் சென்ற வாகனங்களுக்கும் சிலர் தீ வைத்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கட்டுப்படுத்த ஈரான் நாட்டு ராணு வம் வரவழைக்கப்பட்டது. அவர் கள் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி போராட்டக்காரர்களைக் கலைந்துப் போகச் செய்தனர்.
மேலும் சிலர் கைது செய்யப் பட்டதாகவும் தகவல் வெளியாகி யுள்ளது. கைது செய்ய வரும் போலீஸார், ராணுவத்தினர் மீது கல் வீசி போராட்டக்காரர்கள் தாக்கினர்.
கடந்த வியாழக்கிழமை தொடங்கிய போராட்டம் நேற்று தீவிரமடைந்தது.
இதையடுத்து 10 நகரங்களி லும் போலீஸாரும், ராணுவத் தினரும் குவிக்கப்பட்டுள்ளனர். போராட்டம், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்களை உடனடியாக கைது செய்ய அவர்களுக்கு உத் தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
14 mins ago
சினிமா
10 mins ago
தமிழகம்
32 mins ago
தமிழகம்
34 mins ago
க்ரைம்
40 mins ago
க்ரைம்
49 mins ago
இந்தியா
45 mins ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago