ஆப்கானிஸ்தானில் அரசுக்கு எதிராக கடும் தாக்குதல்: ‘கஜினி’க்கு உரிமை கொண்டாடும் தலிபான்கள்

By ஏஎஃப்பி

கஜினி நகரம் தங்கள் வசமே இருப் பதாக ஆப்கானிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் அந்த நகரம் தங்களின் கட்டுப் பாட்டில் இருப்பதாக தலிபான் களும் தெரிவிப்பதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் நாட்டின் கஜினி மாகாணத்திலுள்ள கஜினி நகரைக் கைப்பற்ற நேற்று முன்தினம் தலிபான்கள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் 14 போலீஸார் இறந்தனர். பதிலுக்கு ஆப்கானிஸ்தான் ராணுவம், போலீ ஸார், அமெரிக்கப் படைகள் கூட்டு சேர்ந்து தாக்குதல் நடத்தியதில் 39 தலிபான்கள் கொல்லப்பட்டனர்.

இந்த நிலையில் நகரை தங்கள் வசம் கொண்டு வந்துள்ளதாக ஆப்கானிஸ்தான் அரசு அறிவித் துள்ளது. இதுகுறித்து நேற்று கஜினியில் அரசு அதிகாரிகள் கூறியதாவது: கஜினி நகரம் முழுக்க முழுக்க ஆப்கானிஸ்தான் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. பாதுகாப்புப் படையினர் சிறப்பாக போரிட்டு தலிபான்களைக் கொன்றுவிட்டனர்.

பல்வேறு இடங்களில் பதுங்கி யிருந்த தலிபான்களை பாதுகாப்புப் படையினர் தேடிக் கண்டுபிடித்துக் கொன்றுள்ளனர். நகரம் முழுவதும் பாதுகாப்புப் படையினரின் பாதுகாப்பில் உள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து நேற்று கஜினி தொகுதி எம்.பி. ஷா குல் ரெசாயே கூறியதாவது: கஜினி நகரிலுள்ள முக்கியமான தொலை தொடர்பு கோபுரத்தை தலிபான் கள் வெடிவைத்துத் தகர்த்துவிட்ட னர். இதனால் நகரில் மின் சேவை தடைபட்டுள்ளது. மேலும் செல்போன் சேவையும் துண்டிக்கப் பட்டுள்ளது. இதனால் நகரம் யார் கட்டுப்பாட்டில் உள்ளது என்பதை தெரிந்துகொள்வது கடினமாக உள்ளது.

நகரம் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதாக ஆப்கானிஸ்தான் அரசு தெரிவிக்கிறது. இதுதொடர்பாக கஜினியிலுள்ள அதிகாரிகளைத் தொடர்புகொண்டு கேட்டபோது, தொடர்ந்து தலிபான்களுடன் அங்கு சண்டை நடைபெற்று வருவதாகத் தெரிவித்தனர். கஜினியைச் சுற்றிலும் இந்த துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து அங்கு கூடுதல் படைகள் குவிக் கப்பட்டுள்ளதாகவும், அமெரிக்கப் படையைச் சேர்ந்த ஹெலிகாப்டர் கள் அங்கு வந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் தலிபான்களை விரட்ட, வானிலிருந்து ஏவுகணைத் தாக்குதலும் நடத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆனால் அதே நேரத்தில் கஜினி நகரம் தங்களது கட்டுப்பாட்டில் உள்ளதாக தலிபான்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபியுல்லா முஜாஹித் கூறியதா வது:

கஜினி நகரிலுள்ள ஆப்கன் பாதுகாப்புப் படையினரை நாங்கள் விரட்டி விட்டோம். நகரை எங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள் ளோம். கஜினியில் இருந்த பாதுகாப்புப் படையைச் சேர்ந்த பட்டாலியனைத் தோற்கடித்தோம். மேலும் அங்கிருந்த துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள், குண்டுகள், 4 லாரிகளை கைப்பற்றிவிட்டோம்.

நகரை எங்கள் தலிபான் போராளி கள் பாதுகாத்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

கஜினி நகரம் தங்களது கட்டுப்பாட்டில் இருப்பதாக ஆப்கன் அரசு, தலிபான்கள் என இருவருமே கூறி வருவதால் அங்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது. 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

வாழ்வியல்

7 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

10 hours ago

ஓடிடி களம்

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

மேலும்