இந்தியா வருகிறார் தென் கொரிய அதிபர்

By செய்திப்பிரிவு

தென் கொரிய அதிபர் மூன் ஜே இன் 5 நாள் பயணமாக  இந்தியா வர இருக்கிறார்.

இதுகுறித்து ஏஎன்ஐ, தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் முதல் முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்ய இருக்கிறார். ஜூலை 8 லிருந்து ஜூலை 11 ஆம் தேதிவரை மூன் ஜே இன்  சுற்றுப்பயணம் செய்ய இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பயணத்தில் மூன்னுடன் மூத்த தென்கொரிய அதிகாரிகள் உடன் வரவுள்ளனர்.

 இந்த சுற்றுப்பயணத்தில் தென் கொரியா - இந்தியா இடையே பல்வேறு தொழில் சார்ந்த கூட்டங்களில் அவர் கலந்து கொள்கிறார். மேலும் கல்வி, மாணவர்கள், சுற்றுலா பயணிகள் குறித்து இரு நாடுகளின் எதிர்காலத் திட்டங்கள் சார்ந்து பிரதமர் மோடியுடன் ஆலோசனை நடத்துகிறார்.

அத்துடன் இந்தியா - தென்கொரிய ஐடையே பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து இந்திய குடியரசுத் தலைவர்  ராம்நாத் கோவிந்த் சந்திக்க இருக்கிறார்.

மூன் ஜே உன்னின் இந்தியப்  பயணத்தில் பொருளாதார தளங்களில் விரிவாக்கம் செய்வது குறித்து இரு நாடுகளும் முக்கியத்துவம் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

10 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

ஜோதிடம்

12 hours ago

மேலும்