அதிபர்கள் ட்ரம்ப் - புதின் சந்திப்பு

By செய்திப்பிரிவு

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் பின்லாந்து தலைநகர் ஹெல்சின்கியில் நேற்று சந்தித்துப் பேசினர்.

முதலில் இருவரும் தனியாக பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சந்திப்பு 2 மணி நேரம் நீடித்தது. அதன்பின் இருநாட்டு வெளியுறவு அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் அடங்கிய குழுவினருடன் இணைந்து ட்ரம்பும் புதினும் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சந்திப்பு 90 நிமிடங்கள் நீடித்தது. அதன்பின் புதினும் ட்ரம்பும் நிருபர்களுக்கு கூட்டாக பேட்டியளித்தனர்.

அப்போது அதிபர் புதின் கூறியதாவது: பனிப்போர் காலம் முடிந்துவிட்டது. இப்போது ரஷ்யாவும் அமெரிக்காவும் புதிய சவால்களை எதிர்கொண்டுள்ளன. வடகொரியா பிரச்சினையில் சுமுக தீர்வு காணப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்ததா என்று ட்ரம்ப் கேள்வி எழுப்பினார். அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யா ஒருபோதும் தலையிட்டது இல்லை என்பதை மீண்டும் உறுதிபட கூறுகிறேன். என்னை ட்ரம்ப் நம்புகிறார். அவரை நான் நம்புகிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிபர் ட்ரம்ப் கூறியதாவது:

அமெரிக்கா, ரஷ்யா இடையிலான பிரச்சினைகள் உலகறிந்தது. இருநாட்டு உறவில் இப்போது மாற்றம் ஏற்பட்டுள்ளது. சர்வதேச பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் இரு நாடுகளும் இணைந்து செயல்படும்.   இனி வரும் காலங்களிலும் இருவரும் அடிக்கடி சந்தித்துப் பேசுவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் பின்லாந்து தலைநகர் ஹெல்சின்கியில் நேற்று சந்தித்துப் பேசினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

19 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

3 hours ago

தமிழகம்

3 hours ago

ஆன்மிகம்

2 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

விளையாட்டு

3 hours ago

மேலும்