இந்தியா, தென்னாப்பிரிக்கா வின் தலைமையை எதிர்பார்த்து உலகம் காத்திருக்கிறது என்று வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.
கடந்த 1893 ஜூன் 7-ம் தேதி தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில் இருந்து பிரிடோரியாவுக்கு ரயிலில் முதல் வகுப்பில் காந்தியடிகள் பயணம் செய்தார்.
கருப்பினத்தைச் சேர்ந்தவர் என்பதால் அந்த பெட்டியில் இருந்து கீழே இறங்கி 3-ம் வகுப்பில் பயணிக்குமாறு அவரை சிலர் மிரட்டினர். அதற்கு அவர் மறுப்பு தெரிவிக்கவே பீட்டர்மாரிட்ஸ்பர்க் ரயில் நிலையத்தில் நள்ளிரவில் வலுக்கட்டாயமாக இறக்கிவிடப்பட்டார். இந்த சம்பவத்தின் 125-வது நினைவு தினம் பீட்டர்மாரிட்ஸ்பர்க் நகரில் நேற்று நடைபெற்றது. இதில் இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பங்கேற்று பேசியதாவது: மகாத்மா காந்தி, நெல்சன் மண்டேலா ஆகிய இரு பெரும் தலைவர்கள் அடிமைத்தனத்தில் வாழ்ந்த மக்களுக்கு நம்பிக்கையை அளித்தனர். வெள்ளை யின ஆட்சி முடிவுக்கு வந்தபிறகு தென்னாப்பிரிக்காவுடன் முதல் வர்த்தக உறவை ஏற்படுத்தியது இந்தியாதான். அப்போது முதல் இருநாடுகளுக்கும் இடையே நட்புறவு நீடிக்கிறது. இந்தியா, தென்னாப்பிரிக்கா வின் தலைமையை எதிர்பார்த்து உலகம் காத்திருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
51 mins ago
ஜோதிடம்
55 mins ago
விளையாட்டு
7 hours ago
சினிமா
7 hours ago
இந்தியா
8 hours ago
தமிழகம்
9 hours ago
விளையாட்டு
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
தமிழகம்
10 hours ago
வாழ்வியல்
10 hours ago
தமிழகம்
10 hours ago