அதிபர் ட்ரம்ப் டவரில் தீ: ஒருவர் பலி, 6 பேர் காயம்

By செய்திப்பிரிவு

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு சொந்தமான ‘ட்ரம்ப் டவர்’ கட்டிடத்தில் தீ விபத்து நேரிட்டது. இதில் ஒருவர் பலியானார். 6 பேர் தீக்காயம் அடைந்தனர்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அதிபர் ட்ரம்புக்கு சொந்தமான 58 மாடி கட்டிடம் உள்ளது. ட்ரம்ப் டவர் என்றழைக்கப்படும் இந்த கட்டிடத்தில் பல் வேறு வணிக நிறுவனங்கள், குடியிருப்புகள் உள்ளன.

இந்த கட்டிடத்தின் 50-வது மாடியில் நேற்றுமுன்தினம் தீ விபத்து நேரிட்டது. உடனடியாக தீயணைப்புப் படை வீரர்கள் விரைந்து சென்று 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் சிக்கிய டாட் பிராஸ்னர் (67) என்பவர் மருத்துவமனையில் உயிரிழந்தார். மேலும் 6 பேர் தீக்காயம் அடைந் தனர். மூன்று மாதங்களுக்கு முன்பு ட்ரம்ப் டவரின் மொட்டை மாடியில் தீ விபத்து நேரிட்டது. இதில் 2 பேர் தீக்காயமடைந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 mins ago

தமிழகம்

3 hours ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

41 mins ago

சினிமா

51 mins ago

இந்தியா

59 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

5 hours ago

மேலும்