இராக் தலைநகர் பாக்தாத்தின் மத்திய பாக்தாத்தில் நடந்தப்பட்ட இரண்டு தற்கொலைப் படை தாக்குதலில் 35 பேர் பலியாகினர்.
இதுகுறித்து ஈராக் உள்துறை அமைச்சகம் சார்பில், "இராக் தலைநகர் பாக்தாத்தில் மக்கள் கூட்டம் அதிகமுள்ள தைரான் சதுக்கத்தில் திங்கட்கிழமை காலை இரண்டு இடங்களில் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 16 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்” என்று கூறப்பட்டுள்ளது
இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
எனினும் இந்தத் தாக்குதலை ஐஎஸ் தீவிரவாதிகள் நிகழ்த்தி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
சமீப காலமாக இராக் தலைநகர் பாக்தாத்தில் தீவிரவாதத் தாக்குதல் குறைந்து வருகிறது. இராக்கில் அந்நாட்டு அரசுப் படைகள் ஐஎஸ் தீவிரவாதிகளின் பெரும்பாலான இடங்களை கைப்பற்றியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் அரசுப் படைகளுக்கு எதிராக ஐஎஸ் தீவிரவாதிகள் அவ்வப்போது இம்மாதிரியான தாக்குதலை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
விளையாட்டு
7 hours ago
இந்தியா
7 hours ago
விளையாட்டு
9 hours ago
இந்தியா
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
ஜோதிடம்
10 hours ago
ஜோதிடம்
10 hours ago
ஜோதிடம்
11 hours ago