நுண்ணறிவில் ஐன்ஸ்டீனை மிஞ்சிய இந்திய சிறுவன்

By செய்திப்பிரிவு

பிரிட்டனை தலைமையிடமாக கொண்ட மென்ஸா அமைப்பு, மொழித் திறன், பொது அறிவு, நினைவுத் திறன், கணிதத் திறன், சிக்கலுக்குத் தீர்வு காணும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் நுண்ணறிவுத் திறன் தேர்வை நடத்தி வருகிறது. இதில் உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகள் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், ஸ்டீபன் ஹாக்கிங் ஆகியோர் 160 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றிருந்தனர்.

மென்ஸா அமைப்பு அண்மையில் நடத்திய தேர்வில் பிரிட்டனின் தென்கிழக்குப் பகுதியான வோகிங்ஹாம் நகரைச் சேர்ந்த இந்திய வம்சாவளி சிறுவன் மெகுல் கார்க் 162 மதிப்பெண்கள் பெற்று புதிய சாதனை படைத்துள்ளார்.

அவரது தாயார் திவ்யா கூறியபோது, “கடந்த ஆண்டு எனது மூத்த மகன் துருவ் கார்க் (13) மென்ஸா போட்டியில் 162 மதிப்பெண்கள் பெற்றான். அண்ணனை பின்பற்றி தம்பியும் இந்த ஆண்டு 162 மதிப்பெண்களை பெற்றுள்ளான்” என்று தெரிவித்தார். மெகுலின் தந்தை கவுரவ் கார்க் 20 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் இருந்து பிரிட்டனில் குடியேறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

8 mins ago

இந்தியா

59 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

11 hours ago

மேலும்