ரோஹிங்கியா முஸ்லிம்கள் மியான்மர் திரும்புவது தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக வங்கதேசம் கூறியுள்ளது.
இதுகுறித்து வங்கதேசம் அதிகாரிகள் தரப்பில், "மியான்மருக்கு செவ்வாய்க்கிழமை திரும்ப இருந்த ரோஹிங்கியா முஸ்லிம்கள் பயணம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. ரோஹிங்கியா அகதிகளை அவர்கள் சொந்த நாட்டுக்கு அனுப்புவது தொடர்பான வேலை தொடர்ந்து நடந்து வருகிறது” என்று கூறியுள்ளனர்.
ரோஹிங்கியா முஸ்லிம்களை மியான்மர் அனுப்பும் தேதி எதையும் அவர்கள் குறிப்பிடவில்லை.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் வங்கதேசம் முகாம்களில் தங்கியிருந்த ரோஹிங்கியா முஸ்லிம்கள் ”எங்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும். மியான்மருக்குத் திருப்பி அனுப்பினால், அங்கு எங்கள் உயிர், உடைமைக்குப் பாதுகாப்பு கிடைக்கும் என்று உறுதிமொழி அளிக்க வேண்டும்’’ என்று வலியுறுத்தி கோஷமிட்டு போராட்டம் நடத்தினர்.
மியான்மரின் ரெக்கைன் பகுதியில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் வசித்தனர். அந்தப் பகுதியில் உள்ள போலீஸ் நிலையத்தின் மீது முஸ்லிம்கள் தாக்குதல் நடத்தினர். அதில் போலீஸார் சிலர் பலியானதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து மியான்மர் ராணுவத்தினரும் புத்த மதத்தினரும் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது பயங்கர தாக்குதல் நடத்தினர்.
அதனால் மியான்மரில் இருந்து தப்பி அண்டை நாடான வங்கதேசத்துக்குள் அகதிகளாகப் புகுந்தனர். சுமார் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட ரோஹிங்கியா முஸ்லிம்கள் வங்கதேச முகாம்களில் எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் நெருக்கடியில் வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், மியான்மர் - வங்கதேச அரசுக்கு இடையே கடந்த வாரம் ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, 7.50 லட்சம் ரோஹிங்கியா முஸ்லிம்களை 2 ஆண்டுகளுக்குள் மீண்டும் மியான்மருக்கு திருப்பி அனுப்ப முடிவெடுக்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
கல்வி
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
3 hours ago
தமிழகம்
9 hours ago
சினிமா
9 hours ago
சுற்றுச்சூழல்
10 hours ago
உலகம்
10 hours ago
வாழ்வியல்
11 hours ago
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago