பிலிப்பைன்சில் தீ விபத்து 37 பேர் பலி

By செய்திப்பிரிவு

பிலிப்பைன்சில் வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 37 பேர் இறந்தனர்.

பிலிப்பைன்சில் உள்ள தாவோ நகரில் 4 அடுக்குமாடிக் கொண்ட வணிக வளாக கட்டிடம் ஒன்றின் 3-வது தளத்தில் நேற்று முன்தினம் காலை தீ பிடித்தது. உடனடியாக மற்ற தளங்களுக்கும் தீ பரவியது. இதில் 37 பேர் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. கட்டிடத்தின் மேல் தளத்தில் ‘கால் சென்டர்’ ஒன்று உள்ளது. அந்த அலுவலகம் 24 மணி நேரமும் செயல்படும். அங்கிருந்தவர்களில் பெரும்பாலோர் இறந்திருக்கலாம் என்று போலீஸார் தெரிவித்தனர்.

தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்க கடுமையாக போராடியும் நேற்று காலை வரை தொடர்ந்து தீ எரிந்து கொண்டிருந்தது. தீவிபத்துக்கான காரணம் குறித்து உடனடியாகத் தெரியவில்லை. இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

56 secs ago

இந்தியா

22 mins ago

க்ரைம்

26 mins ago

இந்தியா

35 mins ago

விளையாட்டு

36 mins ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

மேலும்