நியூயார்க் நகரில் பாதசாரிகள் மீது லாரி ஓட்டிச் சென்று தாக்குதல் நடத்திய நபரின் புகைப்படத்தை அமெரிக்க போலீஸார் வெளியிட்டுள்ளனர்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரிலுள்ள மன்ஹட்டன் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு இளைஞர் ஒருவர் லாரி ஓட்டிச் சென்று தாக்குதல் நடத்தியதில் 8 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.
தற்போது இந்தத் தாக்குதலில் ஈடுபட்டவரின் புகைப்படத்தை அமெரிக்க போலீஸார் வெளியிட்டுள்ளனர்.
உஸ்பெகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்
மன்ஹட்டனில் தாக்குதலில் ஈடுபட்டவர் உஸ்பெகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த சைபுல்லா சைபொவ் என்றும் அவரது குடும்பம் உஸ்பெகிஸ்தான் நாட்டிலிருந்து அமெரிக்காவுக்கு குடியேறியுள்ளது என்று அமெரிக்க போலீஸார் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அமெரிக்க போலீஸார் சைபொவ் குறித்து அவரது அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
24 mins ago
இந்தியா
38 mins ago
சினிமா
2 hours ago
கல்வி
4 hours ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
4 hours ago
தமிழகம்
9 hours ago
இந்தியா
9 hours ago
தமிழகம்
10 hours ago
சுற்றுச்சூழல்
11 hours ago
தமிழகம்
11 hours ago
சுற்றுலா
11 hours ago