ஆக.16: இன்று என்ன? - பாரதியாரை வென்ற கவி!

By செய்திப்பிரிவு

தமிழ் முன்னோடி எழுத்தாளர் அ.மாதவையா 1872 ஆகஸ்டு 16-ம் தேதி திருநெல்வேலி அருகே பெருங்குளம் கிராமத்தில் பிறந்தார். 1914-ம் ஆண்டில் மகாகவி பாரதியாரும் பங்கேற்ற “இந்திய கும்மி” என்ற கவிதைப் போட்டியில் முதல் பரிசு வென்றார் மாதவையா.

“செந்தமிழ் நாடென்னும் போதினிலே” பாடலுக்காக பாரதிக்கு அன்று 2-ம் பரிசு கிடைத்தது. நேசன், பஞ்சாமிர்தம் ஆகிய இதழ்களை நடத்தி வந்தார். நாவல், சிறுகதைத் தொகுப்பு, நாடகங்கள், கவிதைகள் என ஏராளமான கட்டுரைகளை தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார்.

சென்னை பல்கலைக்கழக செனட் உறுப்பினராக 1925-ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே ஆண்டில் பல்கலைக்கழக ஆட்சிமன்றக் கூட்டத்தில் தமிழை இளங்கலைப் பட்டப்படிப்பில் கட்டாயப் பாடமாக சேர்க்க வேண்டும் என உரையாற்றினார். பேசி முடித்து அமர்ந்ததும் அந்த இடத்திலேயே உயிர் பிரிந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 hours ago

சினிமா

6 hours ago

சுற்றுச்சூழல்

7 hours ago

உலகம்

7 hours ago

வாழ்வியல்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

சினிமா

10 hours ago

க்ரைம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்